திகன கலவரத்தில் முஸ்லிம்களை, ஏன் சஜித் சந்திக்கவில்லை - இதோ அவரது விளக்கம்
Posted by tahaval on November 06, 2019
தான் கடுமையாக சுகயீனமுற்றிருந்ததால் திகன கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை சந்திக்க வர முடியவில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
கண்டி மாவட்டம் திகன நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு முஸ்லிம்களில் கணிசமான அளவினர் ஆதரவு வழங்கிவரும் நிலையில் கலவரங்களில் பாதிக்கப்பட்ட எந்த ஒரு முஸ்லிம் பிரதேசங்களுக்கு சஜித் செல்லவில்லை அவர்களுக்கு அறிக்கை ஒன்றின் மூலாமாவது ஆறுதல் கூறவில்லை என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் திகன நகரில் இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார்.