விபத்தில் பலியான மூவரினதும் பூதவுடல்கள் மடகஸ்காரில் நல்லடக்கம்
Posted by tahaval on November 06, 2019
மடகஸ்காரில் அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களுள் வெலிகமையைச் சேர்ந்த அஸ்ஸெய்யித் ரிதா மெளலானா என்பவரும் உயிரிழந்தார். வெலிகமையைச் சேர்ந்த மொஹமட் மெளலானாவின் புதல்வரான இவர், தந்தையின் இரத்தினக்கல் வியாபாரத்தை செய்து வருகிறார்.
குறிப்பிட்ட தினம் இவர்கள் மாலை 5.00 மணி அளவில் களுத்துறையைச் சேர்ந்த ஜஉபர் ஸித்தீக் மற்றும் கன்னத்தோட்டைச் சேர்ந்த மொஹமட் மிஸ்பர் ஆகியோருடன் இவர் வியாபார நோக்கமாக வாகனத்தில் சென்றுள்ளனர்.
இச்சமயம் வாகனம் வீதியை விட்டு விலகி 250 அடி ஆழமான கங்கையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. எனினும் அடுத்த நாள் காலையிலேயே பிரதேசவாசிகள் கண்டுள்ளனர். இவர்களின் தகவலின் பிரகாரம் கங்கையிலிருந்து மூவரினதும் சடலம் மீட்கப்பட்டன.
உயிரிழந்த ரிதா மெளலானா சிறந்த சமூக சேவையாளர். அரசியலிலும் ஈடுபாடு காட்டி வந்துள்ளார். முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகரவோடு நெருங்கி பழகி வந்துள்ளார்.
இவரது ஜனாஸா பிரேத பரிசோதனையின் பின்னர் மடகஸ்காரிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
குறிப்பிட்ட தினம் இவர்கள் மாலை 5.00 மணி அளவில் களுத்துறையைச் சேர்ந்த ஜஉபர் ஸித்தீக் மற்றும் கன்னத்தோட்டைச் சேர்ந்த மொஹமட் மிஸ்பர் ஆகியோருடன் இவர் வியாபார நோக்கமாக வாகனத்தில் சென்றுள்ளனர்.
இச்சமயம் வாகனம் வீதியை விட்டு விலகி 250 அடி ஆழமான கங்கையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. எனினும் அடுத்த நாள் காலையிலேயே பிரதேசவாசிகள் கண்டுள்ளனர். இவர்களின் தகவலின் பிரகாரம் கங்கையிலிருந்து மூவரினதும் சடலம் மீட்கப்பட்டன.
உயிரிழந்த ரிதா மெளலானா சிறந்த சமூக சேவையாளர். அரசியலிலும் ஈடுபாடு காட்டி வந்துள்ளார். முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகரவோடு நெருங்கி பழகி வந்துள்ளார்.
இவரது ஜனாஸா பிரேத பரிசோதனையின் பின்னர் மடகஸ்காரிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.